search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முருகன் கோவில்"

    • திருவிழாவின் முதல் 9 நாட்கள் தினமும் கருவறையில் உள்ள வேலில் சொருகப்பட்ட எலுமிச்சம் பழங்கள் ஏலம்விடும் நிகழ்ச்சி நடந்தது.
    • நாட்டாமை புருஷோத்தமன் ஆணி தைத்த காலணி மீது ஏறி நின்று ஏலத்தை நடத்தினார்.

    திருவெண்ணைநல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமத்தில் உள்ள சின்ன மயிலம் என்று அழைக்கப்படும் இரட்டைமலை குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி வீதி உலாவும், 21-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது. 23-ந் தேதி தேரோட்டமும், 24-ந்தேதி காவடி பூஜையும் நடந்தது. 25-ந் தேதி நள்ளிரவு 12மணி அளவில் நடந்த இடும்பன் பூஜையில் திருவிழாவின் முதல் 9 நாட்கள் தினமும் கருவறையில் உள்ள வேலில் சொருகப்பட்ட எலுமிச்சம் பழங்கள் ஏலம்விடும் நிகழ்ச்சி நடந்தது.

    நாட்டாமை புருஷோத்தமன் ஆணி தைத்த காலணி மீது ஏறி நின்று ஏலத்தை நடத்தினார். முதல் நாள் பழம் 50 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் 2-ம் நாள் பழம் 26 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் , 3-ம் நாள் பழம் 42 ஆயிரத்து 100 ரூபாய்க்கும், 4-ம் நாள் பழம் 19 ஆயிரம் ரூபாய்க்கும், 5-ம் நாள் பழம் 11ஆயிரம் ரூபாய்க்கும், 6-ம்நாள் பழம் 34 ரூபாய்க்கும், 7-ம் நாள் பழம் 24 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், 8-ம் நாள் பழம் 13 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், 9-ம் நாள் பழம் 15ஆயிரம் ரூபாய்க்கும் என 9 நாள் பழங்களும் 2 லட்சத்து 36 ஆயிரத்து 100 ரூபாய்க்கு ஏலம் போனது.

    இந்த பூஜையில் பெங்களூரு, புதுச்சேரி, சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். குழந்தை இல்லாத தம்பதியினர் ஈரத் துணியுடன் போட்டி போட்டு எலுமிச்சம் பழத்தை ஏலம் எடுத்து சென்றனர். அனைவருக்கும் கருவாட்டு குழம்பு சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது . இந்தக் கோவிலில் ஏற்கனவே ஏலத்தில் பழம் வாங்கி சாப்பிட்டு குழந்தை பெற்றவர்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து எடைக்கு எடை காணிக்கை செலுத்தினர். கடந்த ஆண்டு முதல் பழம் 31ஆயிரத்து 500 ரூபாய்க்கும், 9 பழங்களும் சேர்த்து 80 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் ஏலம் போயிருந்தது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 1 லட்சத்து 55 ஆயிரத்து 800 ரூபாய்க்கு கூடுதலாக ஏலம் போனது . எலுமிச்சம் பழம் ஏலம் எடுக்க விரும்புவர்கள் உள்ளூர் நபர்களை வைத்தே ஏலம் எடுக்க வேண்டும் என கட்டுப்பாடு உள்ளது. 

    • முருகன் கோவில்களுக்குச் செல்லும் பாதைகளில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி தென்படுகின்றன.
    • கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளை குட்டி யானை உள்பட 8 காட்டு யானைகள் கடந்த 3 நாள்களுக்கு முன்பு கடந்து சென்றுள்ளன.

    வடவள்ளி:

    மருதமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் வழியில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், கோவிலுக்கு நடந்து, வாகனங்களில் செல்லும் பக்தர்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் ஆனைக்கட்டி, தடாகம், பேரூர், மருதமலை, போளூவாம்பட்டி, மதுக்கரை, ஆகிய பகுதிகளில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக மருதமலை, அனுவாவி முருகன் கோவில்களுக்குச் செல்லும் பாதைகளில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி தென்படுகின்றன.

    இந்நிலையில், மருதமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடிய வீடியோ காட்சிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியாகின.

    இதேபோல், அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளை குட்டி யானை உள்பட 8 காட்டு யானைகள் கடந்த 3 நாள்களுக்கு முன்பு கடந்து சென்றுள்ளன.

    தற்போது இந்த இரண்டு வீடியோ காட்சிகளும் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், மருதமலை முருகன் கோவிலுக்கு நடந்து செல்வதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் நேரக்கட்டுப்பாடு விதித்து காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மருதமலை சரகத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் கோவிலுக்கு செல்லும் தார்சாலை, படிக்கட்டுகள் வனப்பகுதியில் அமைந்துள்ளதால், சிறுத்தைகள், யானைகள் போன்ற வனவிலங்குகள் பெரும்பாலான முறை கடந்து செல்கின்றன.

    கோவிலுக்குச் சென்று வரும் பக்தர்கள் மற்றும் வாகனங்களின் சத்தத்தால் பெரும்பாலும் பகல் நேரங்களில் அவை கடந்து செல்வதில்லை.வன விலங்குகளின் நடமாட்டத்தை இரவு, பகலாக கண்காணித்து காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பொது மக்கள் நடந்து செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. வாகனங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சென்று வரலாம். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். 

    • ரசீது மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது.
    • கியூ ஆர் கோடு வசதியினை பயன்படுத்தி பக்தர்கள் விரைவாக நன்கொடை செலுத்த முடியும்.

    சென்னிமலை:

    ஆதி பழனி என போற்றப்படும் புகழ் பெற்ற சென்னிமலை முருகன் கோவிலிற்கு ஈரோடு மாவட்டம் அல்லாமல் தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.

    வாரம் தோறும் செவ்வாய்கிழமை மற்றும் சஷ்டி, கிருத்திகை, அம்மாவாசை உள்ளிட்ட விழா காலங்களில் மிக அதிக அளவில் பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழங்கி செல்வதுடன் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

    தரிசனத்திற்கு வருகை தரும் பக்தர்கள் தரிசனத்திற்கு தனியாகவும், நன்கொடைகள் செலுத்த திருவிழா நேரத்தில் தனியாகவும் வரிசையில் காத்திருந்து நன்கொடைகள் வழங்க அன்னதானத்திற்கு தனியாகவும், திருப்பணிகளுக்கு தனியாகவும், வேண்டுதல் செய்ய பொது நன்கொடை தனியாகவும் செலுத்துவதில் பக்தர்களுக்கு மிக சிரமம் இருந்து வருகிறது.

    மேலும் நன்கொடைகள் செலுத்தி அறநிலைய துறை பணியாளர்களிடம் நன்கொடை ரசீது பெருவதில் கூடுதல் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவும், பக்தர்கள் சிரமம் இன்றி நன்கொடைகள் செலுத்த வசதியாக 'கியூ ஆர் கோடு ' வசதியினை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.

    இது குறித்து சென்னி மலை மலை மீது கோவில் வளாகத்தில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். மேலும் டிக்கெட் வழங்கும் கவுன்டரில் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்ய வசதி செய்துள்ளனர். நன்கொடை செலுத்தும் பக்தர்களுக்கு அது குறித்த தகவல், ரசீது மொபைல் எண்னுக்கு குறுந்தகவல் அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த கியூ ஆர் கோடு வசதியினை பயன்படுத்தி பக்தர்கள் விரைவாக நன்கொடை செலுத்த முடியும் என செயல் அலுவலர் தெரிவித்தார். 

    • 16 வகையான மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.
    • பக்தர்கள் மிதவை தேரினை வடம் பிடித்து இழுக்க, தெப்பத்தினை மூன்று முறை சுற்றி வந்து சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    திருப்பரங்குன்றம்:

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க மயில் வாகனம், அன்னவாகனம், வெள்ளி பூத வாகனம், பச்சைக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

    விழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக தை கார்த்திகையை முன்னிட்டு இன்று காலை ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு சுவாமிகள் முன்னிலையில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாரா தனைகள் நடைபெற்றது. தொடர்ந்து 16 கால் மண்டபம் அருகே உள்ள தேரில் சுப்பிரமணியசுவாமி தெய் வானையுடன் எழுந்தருளினார்.

    அங்கு கொட்டும் மழையில் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க தேர் கீழ ரதவீதி, மேல ரதவீதி, பெரிய ரதவீதிகள் வழியாக வலம் வந்தது. தொடர்ந்து இன்று இரவு சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. விழாவினை முன்னிட்டு காலை 10 மணி அளவில் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் தெப்ப தேரில் சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளுகிறார். அங்கு பக்தர்கள் மிதவை தேரினை வடம் பிடித்து இழுக்க, தெப்பத்தினை மூன்று முறை சுற்றி வந்து சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

    இதேபோல இரவு மின்னொளியிலும் தெப்ப மிதவைத்தேரில் சுவாமி எழுந்தருள மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் சுரேஷ் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர். 

    • திருச்செந்தூருக்கு நேரடி போக்குவரத்து இல்லாமல் மாற்று பாதையில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • வெளியூர் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கமான அளவை விட குறைந்து கோவில் காணப்படுகிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமாகி தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. திருச்செந்தூர் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி நடைபெறுகிறது.

    கனமழை காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் திருச்செந்தூருக்கு நேரடி போக்குவரத்து இல்லாமல் மாற்று பாதையில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்செந்தூர் வரும் பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் நெல்லையில் இருந்து மூலைகரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, மெஞ்ஞானபுரம் வழியாக வந்து செல்கின்றனர்.

    மேலும் ரெயில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் வெளியூர் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கமான அளவை விட குறைந்து கோவில் காணப்படுகிறது. இதனால் கோவில் வளாகத்தில் தங்கியுள்ள பக்தர்கள், உள்ளூர் பக் தர்கள் சுவாமியை எளிதாக தரிசனம் செய்து வரு கின்றனர்.

    இன்று காலையில் சங்கரன்கோவில் பக்தர்கள் வேல் குத்தியும், காவடி எடுத்து வந்து வழிபாடு செய்தனர். 

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் சர்வ அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில் எழுத்தருளினார்.

    நாகர்கோவில் :

    கந்த சஷ்டி விழா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ் வான சூரசம்ஹார விழா குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் நேற்று நடந் தது.

    இந்த விழாவையொட்டி நாகர்கோவில் நாகராஜா கோவிலில் உள்ள பாலமுரு கன் சன்னதியில் நேற்று காலையில் முருகப்பெருமா னுக்கு அபிஷேகங்களும், தீபாராதனையும் நடந்தன. இதைத் தொடர்ந்து மாலை 4.30 மணி அளவில் சூரனை வதம் செய்ய முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் சர்வ அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில் எழுத்தருளினார்.

    நாகராஜா கோவிலின் 4 ரதவீதிகளிலும் வலம் வந்த பின்னர் நாகராஜா திடலில் சூரனை, முருகப்பெருமான் வேலால் குத்தி வதம் செய்யும் நிகழ்ச்சி இரவு 7 மணி அளவில் நடந்தது. பின்னர் ஒழுகினசேரியில் உள்ள ஆராட்டுத்துறையில் சாமிக்கு ஆராட்டு நடந்தது. தொடர்ந்து சாமி கோவி லுக்கு எழுந்தருளினார். இன்று நாகராஜா கோவில் பாலமுருகன் சன்னதியில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிேஷகங்கள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ஆரல்வாய்மொழி பெரு மாள்புரம் இந்து நாடார் சமு தாயம் வவ்வால்குகை பால முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நாட்களில் தினமும் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று வந்தது.

    இந்தநிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம் ஹாரம் நேற்று மாலையில் நடந்தது. இதனையொட்டி வவ்வால் குகை பாலமுருகன் சுப்பிரமணியபுரத்திலிருந்து மெயின்ரோடு வழியாகமேள தாளங்களுடன் சூரன் முன்னே செல்ல வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் பாலமுரு கன் பின்னே துரத்தியபடி சென்றார். மாலை 6.30 மணிக்கு சூரனை பால முருகன் வதம் செய்தார். தொடர்ந்து கண்ணை கவரும் வகையில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந் து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய அறக்கட் டளை தலைவர் பகவதி யப்பன், செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் சுயம்பு ராஜா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    தோவாளை செக்கர்கிரி சுப்ரமணியசாமி ஆலயத்தில் சூரசம்ஹார விழா அதிர்வேட்டு முழங்க வானவேடிக்கையோடு கேரள பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சியோடு சிறப்பாக நடைபெற்றது. ஏற்கனவே கந்த சஷ்டியை முன்னிட்டு ஆயிரக்க ணக்கான பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் மேற்கொண் டார்கள். தினசரி முருகப்பெ ருமானுக்கு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடந்தது. நேற்று சூரசம்கா ரத்தை முன்னிட்டு செக் கர்கிரி ஆலயத்தில் இருந்து வேலவன் பல்லக்கில் சூரசம்ஹாரத்துக்கு புறப் பட்டு கோவில் அடிவா ரத்தில் சூரசம்ஹார விழா நடைபெற்றது.

    மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கேரளக் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றது. இதை பொது மக்கள் வியப்புடன் கண்டு களித்தனர்.

    விழா ஏற்பாடுகளை செக்கர்கிரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் விழா கமிட்டி செய்து வந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதி யப்பன், பொறியாளர் லட்சுமணன், விழா குழு நிர்வாகி கருணாநிதி, தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன், துணைத் தலைவர் தாணுஉள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    முடிவில் வான வேடிக்கை நடைபெற்றது. சூரசம்ஹாரம் முடிந்த முருகன் கோவில்களில் முருக பெருமானுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று நடந்தது. வடிவீஸ்வ ரம் அழகம்மன் கோவில், ஆரல்வாய்மொழி வவ்வால் குகை பாலமுருகன் சுவாமி கோவில், தோவாளை செக்கர்கிரி சுப்பிரமணிய சாமி கோவில், வெள்ளி மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்களில் முருக பெருமானுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி முருகன் குன்றம் கோவிலில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண கோலத்தில் இந்திர வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதாளங்களுடன் பட்டண பிரவேசம் வந்த நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சத்ருசம்ஹார அர்ச்சனை நடைபெற்றது.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் 6 நாட்கள் நடைபெறும் கந்தசஷ்டி உற்சவம் கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இன்று வியாழக்கிழமை சத்ருசம்ஹார அர்ச்சனை மற்றும் சுவாமி பிரகார புறப்பாடு நடைபெற்றது.

    நேற்று நடந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

     

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    சனிக்கிழமை காலை யாகசாலை பூஜைகள், கலச பூஜைகள், மகா பூர்ணாகுதி, கலசபிஷேகம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.மாலை 4 மணிக்கு மேல் கோவில் எதிரே சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    வரும் 19-ம் தேதி மாலை சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு உற்சவர் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    • 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
    • கொடியேற்று விழா நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் கந்த சஷ்டி உற்சவம் துவங்கியது. 18-ம் தேதி சனிக்கிழமை சூரசம்கார நிகழ்ச்சி நிகழ்ச்சியும், 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இன்று நடைபெற்ற கொடியேற்று விழா நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் ஊழியர்களும், பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    • வருகிற 18-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது
    • காகணபதி ஹோமம், உதய கால பூஜை, காப்புக் கட்டுதல், சஷ்டி விரதம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது.

    என்.ஜி.ஓ.காலனி:

    நாகர்கோவில் அருகே உள்ள பெருவிளை தெய்வி முருகன் ஆல யத்தின் 54-வது ஆண்டு கந்த சஷ்டி விழா வருகிற 13-ந்தேதி திங்கட்கிழமை தொடங்கி 19-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் வருகிற 13-ந்தேதி திங்கட் கிழமை காலை 5 மணிக்கு புனித நீர் தெளித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. தொடர்ந்து அன்று மகாகணபதி ஹோமம், உதய கால பூஜை, காப்புக் கட்டுதல், சஷ்டி விரதம் மற்றும் பூஜைகள் நடைபெறுகிறது.

    அன்று மாலை 6.30 மணிக்கு பால முருகனாக உருகாப்பு நடை பெறும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து ஆறு படை மகிமை என்ற தலைப்பில் சமய சொற்பொழிவு நடை பெறுகிறது. இரவு 8 மணிக்கு ஓவியப்போட்டியும், 8.30 மணிக்கு மாபெரும் வண்ணக் கோலப்போட்டி நடைபெறு கிறது. இதில் வெற்றி பெறுப வர்களுக்கு முதல் பரிசாக 3001, 2-ம் பரிசாக 2001, 3-ம் பரிசாக 1001 வழங்கப்படுகிறது.

    14-ந்தேதி செவ்வாய்க் கிழமை 2-ம் நாள் உழவர் விழாவாக நடைபெறு கிறது. அன்று இரவு 7 மணிக்கு திருமாங்கல்ய பூஜையும், 8 மணிக்கு மேஜிக் ஷோ நிகழ்ச்சியும், இசை விருந்து நிகழ்ச்சியும் நடைபெறு கிறது. 15-ந்தேதி புதன் கிழமை பூஜைகள் நடை பெறுகின்றன. இரவு 7 மணிக்கு சொற்பொழிவும், 8 மணிக்கு மாபெரும் பரதநாட்டியம் நிகழ்ச்சிகள் நடைபெறு கின்றன. 16-ந்தேதி வியாழக்கிழ மை காலை 6.30 மணி முதல் பூஜைகளும் ஆறுமுகனாக உரு காப்பும் நடைபெறும் நிகழ்ச்சியும். இரவு 7 மணிக்கு பாரதப்போருக்கு யார் காரணம் என்று தலைப்பில் விசாரணை மன்றம் நிகழ்ச்சி யும் நடைபெறுகிறது.

    17-ந்தேதி பூஜைகளும் நடைபெறுகின்றன. தொ டர்ந்து சுவாமி போர்க் கோல முருகனாக உரு காப்பு நடைபெறும் நிகழ்ச்சியும். இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும், திருவிளக்கு பூஜையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை பெஞ்ச் நீதிபதி என். விக்டோரியா கவுரி முதல் திருவிளக்கு தீபம் ஏற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு மகளிர் மாநாடும் நடைபெறுகிறது.

    18-ம் தேதி சனிக்கிழமை காலை 6-ம் நாள் கந்த சஷ்டி விழா, காலை 6.30 மணிக்கு உதய கால பூஜை நிகழ்ச்சியுடன் தொடங்கு கிறது. 11 மணிக்கு கும்பாபி ஷேகமும், பகல் 12 மணிக்கு பெருவிளை அருள்மிகு சொக்கநாதர் ஆலயத்தில் அன்னை ஆதிபராசக்தியி டமிருந்து முருகக்கடவுள் சக்திவேல் வாங்கி வருதல் நிகழ்ச்சியும்

    1 மணிக்கு தெய்வி முருகன் சூரசம்ஹா ரத்திற்குப் புறப் படுதல் நிகழ்ச்சியும், மாலை 6.30 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடைபெறு கிறது. அப்போது வண்ண கலை நிகழ்ச்சிகள் மற்றும் இரவு 8.30 மணிக்கு தொழிலதி பர் கேட்சன் தலைமையில் போட்டி சிலம்பம் நிகழ்ச்சி ஆகியவையும் நடக்

    கிறது. 19-ம் தேதி ஞாயிற்றுக் கிழமை 7-ம் நாள் திருக்கல்யாண விழாவாக நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு பொங்கலிடுதல் நிகழ்ச்சியும், 11 மணிக்கு அன்னாபிஷே கமும், பகல் 12 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி யும், 1 மணிக்கு அன்னதா னமும் வழங்கப் படுகிறது. அன்று மணக் கோல முருகனாக உரு காப்பு நடைபெறும். மாலை 5 மணிக்கு 1008 சகஸ்ரநாம அர்ச்சனை புஷ்பாபிஷேக மும் அதனை தொடர்ந்து பரிசு வழங்குதல் நிகழ்ச்சியும், இரவு 8.30 மணிக்கு நிறைவு தீபாராதனையும் நடக்கி றது.

    இரவு 8.45 மணிக்கு மணிமகுடம் என்ற சமூக நாடகம் நிகழ்ச்சி நடக்கிறது. விழா நாட்களில் முருக னுக்கு அபிஷேகம், அலங் காரம், தீபாராதனை, இன்னிசை கச்சேரி, சஷ்டி கவசம் வாசித்தல் ஆகி யவை நடக்கிறது. கந்த சஷ்டி விழாவையொட்டி கோவில் முன்பு பந்தல் போடப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    விழா ஏற்பாடுகளை கௌரவத் தலைவர் மாசானமுத்து, சட்ட ஆலோ சகர் செல்வகுமார், தலைவர் வெற்றிவேலன், செயலாளர் இராஜபூபதி, பொருளாளர் சிவராஜ், சிறுவர் பக்த சங்க கௌரவத் தலைவர் அருள் குமரன், உபத்தலைவர் இராதாகிருஷ்ணன் இணைச் செயலாளர்கள் ரெங்கராஜ், அழகேசன், அழகுவேல்முருகன், மண்டப பொறுப்பாளர் செந்தில் என்ற அய்யப்பன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மேல் சாந்திகள், நிர்வாகிகள், மகளிர் மன்றத்தினர், ஊர் பொது மக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.

    • தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.பி.ஆறுமுகம் இல்ல திருமண விழா நடந்தது.
    • தொழிலதிபர் மனோகரன், சேர்மன் கே.டி.பிரபாகரன் ஆகியோர் தலைமையில் நடந்தது.

    ராமநாதபுரம்

    திருச்சி மாவட்டம், கீரம்பூர் எஸ்.பன்னீர்-சண்முகவள்ளி ஆகியோர் மகன் சிங்கப்பூரில் வசிக்கும் டி.எம்.இ பட்டதாரி

    ப.கர்ணமுருகனுக்கும் ராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் வடக்கு யாதவர் தெருவில் வசித்து வரும் தி.மு.க ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய விவசாய அணி துணைச் செயலாளர் எம்.பி.ஆறுமுகம், தி.மு.க. ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய துணைச் செய லாளர் ஆ.மேனகா தம்பதி யினரின் மகள் பி.எஸ்.சி பட்டதாரி ஆ.மீனா (எ) ஐஸ்ஸிற்கும் பெரியோர்க ளால் திருமணம் நிச்ச யிக்கப்பட்டு இருந்தது.

    இவர்களது திருமணம் ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் இன்று காலை நடைபெற்றது. இத்திருமணத்திற்கு ராம நாதபுரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ராமநாதபுரம் ஒன்றிய பெருந்தலைவ ருமான கே.டி.பிரபாகரன், தமிழ்நாடு யாதவ மகாசபை பொதுச்செயலாளரும், தொழிலதிபருமான வேலு மனோகரன் ஆகியோர் தலைமையேற்று நடத்தி வைத்தனர்.

    ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ராஜவேணி பார்த்தசாரதி,உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள், தொண் டர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்,பேராவூர் வடக்கு யாதவர் தெரு முதியோர் சங்கம்,மாவீரன் அழகு முத்துக்கோன் இளை ஞர் சங்கத்தைச் சேர்ந்த வர்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    • பழமுதிர்சோலை முருகன் கோவிலில் நாளை அ.தி.மு.க.வினர் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெறும்.
    • அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அருகில் கூறியிருப்பதாவது-

    மதுரை வளையங்குளத் தில் கடந்த 20-ந்தேதி அ.தி.மு.க.வின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் தமிழகத்தில் ஆட்சி அரியணையில் ஏறுவதற்கும் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை அழகர் கோவில் உள்ள பழமுதிர் சோலை கோவிலில் நாளை (29-ந்தேதி) மாலை 4 மணி அளவில் தங்கத் தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.

    இந்த தங்க தேர் இழுக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவ நாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், கே.டி. ராஜேந்திர பாலாஜி, அமைப்புச் செயலாளர் ஜக்கையன், சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி, மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செய லாளர் ராஜ் சத்யன் மற்றும் முன்னாள், இந்நாள், எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகி கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வழக்கமாக தீர்த்தம் கொண்டு செல்லும் காளை மாட்டுடன் புதியதாக வளர்க்கப்பட்ட காளை மாட்டினை பயிற்சிக்காக ஓட்டி சென்றனர்.
    • புதிய காளை மாடு பயிற்சி பெற்ற காளை மாடு போல் வெகு எளிதாக படி வழியில் ஏறியது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலுக்கு மலை அடிவாரத்தில் உள்ள தீர்த்த கிணற்றில் இருந்து காலை 8 மணி பூஜைக்கு பொதி காளைகள் மூலம் 1,320 படிவழியாக தீர்த்த குடங்கள் கொண்டு செல்வது பல வருடங்களாக தொற்று தொட்டு இருந்து வரும் வழக்கம்.

    இந்த அதிசயம் 100 வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. மலை அடிவாரத்தில் உள்ள இடுபன் கோவிலுக்கு பூஜை செய்யும் குருக்கள் வந்து காலை 7.20 மணிக்கு தீர்த்த கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து பொதி காளை மீதுள்ள மூங்கில் கூடையில் வைத்துவிடுவர். மலை கோவிலுக்கு படி வழியாக கோவில் பணியாளர்கள் காளை மாட்டினை ஓட்டி செல்வர்.

    இந்த பணிக்காக தனியாக கோசலையில் 3 பொதிகாளைகள் பாராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இதில் ஒரு மாடு வயது ஆகிவிட்டதால் படி வழியாக திருமஞ்சன தீர்த்த குடம் கொண்டு செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறது. இதற்காக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பக்தர் ஒருவர் முருகனுக்கு தானமாக கொடுத்த பொதி காளை மாடு சிறப்பாக பராமரிக்கபட்டு வந்தது.

    அந்த காளையினை கால்நடை உதவி மருத்துவர் மூலம் கடந்த 3 மாதங்களாக சிறப்பான உணவுகள் கொடுத்து பராமரித்து வந்த பணியாளர்கள் இன்று, வழக்கமாக தீர்த்தம் கொண்டு செல்லும் காளை மாட்டுடன் புதியதாக வளர்க்கப்பட்ட காளை மாட்டினை பயிற்சிக்காக ஓட்டி சென்றனர்.

    வழக்கமாக புதிய மாட்டினை படி வழியாக கொண்டு சென்றால் மிரண்டு கொள்ளும், படியில் ஏறாது. ஆனால் இந்த காளை சிறப்பாக இன்று வந்து சென்றது.

    இனி பயிற்சிக்காக தினமும் காலையில் மாலை, சந்தன பொட்டு, புதிய சலங்கை அணிவித்து பூஜை செய்து தீர்தகுடம் வைக்காமல் அதை பழக்கப்படுத்த பிடித்து செல்வர்.

    புதிய காளை மாடு பயிற்சி பெற்ற காளை மாடு போல் வெகு எளிதாக படி வழியில் ஏறியது. இதை காலை தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் பார்த்து மெய்சிலிர்தனர். காளை சில இடங்களில் மட்டும் இரண்டு இரண்டு படியாக தாண்டி சென்றது. 3 மாதத்தில் நன்கு பயிற்சி பெரும் என மாடு பராமரிக்கும் பணியாளர்கள் தெரிவித்தனர்.

    ×